அமிர்தாவின் வீட்டில் தன்னுடைய காதலை சொல்லியுள்ளார் எழில்.

Baakiyalakshmi Episode Update 23.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் அமிர்தாவின் பெற்றொர் இருவரும் ஏன் பேசிக்கொள்ள மாட்றீங்க என கேட்க நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார். எனக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே அமிர்தாவை தெரியும். எனக்கு உங்க மூணு பேருமே ரொம்ப பிடிக்கும். எனக்கு அமிர்தாவை ஆரம்பித்திலேயே ரொம்ப புடிச்சது. அப்புறம் அவங்க கிட்ட என்னுடைய காதலை சொல்ல நினைத்த போது தான் அவங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது தெரிந்தது. இருந்தாலும் அவர்கள் மீதான அன்பு குறையல, அதன் பிறகுதான் நான் உங்களுக்கு குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போதும் எனக்கு அவங்க மீதான அன்பு குறையல என சொல்கிறார். அமிர்தாவை காதலிப்பதாக சொன்ன உடனேயே அவருடைய அப்பா வீட்டை விட்டு வெளியே போ என திட்டினார்.

ஆனாலும் எழில் பேச வேண்டியதை முழுசாக பேசி விட்டார். நீங்க அமிர்தாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணாம இப்படியே வெச்சிக்க போறீங்களா? நான் உங்க எல்லாரையும் நல்லபடியா பார்த்துப்பேன். உங்க கூடவே இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். நிலா பாப்பாவை ரொம்ப நல்லா பார்த்துப்பேன் என கூறுகிறார். சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன். நீங்க அமிர்தாவை கட்டிக் கொடுக்கிறது உங்களுடைய இஸ்டம் அதுல நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனா அதுக்காக என் கிட்ட பேசாம இருந்துட்டாதிங்க அது சத்தியமா என்னால தாங்க முடியாது. நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன். நீங்க திட்டினாலும் கோபப்பட்டாலும் வேண்டாம்னு சொன்னாலும் கணேஷ் எப்படி உங்களை விட்டு போக மாட்டாரோ அதே மாதிரி நானும் உங்களை விட்டு போக மாட்டேன் என சொல்கிறார்.

அதன்பிறகு எழில் அங்கிருந்து கிளம்பி விட அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்க எழில் மாதிரி நல்ல பையன் கிடைக்க மாட்டான். அத நம்ம எல்லாரையும் நல்லா பார்த்துப்பான் என அமிர்தாவின் அம்மா சொல்கிறார். உடனே அவருடைய அப்பா நம்ம பக்கத்தை மட்டும் தான் யோசிக்கிறோம் எழில் வீட்டுல என்ன சொல்லுவாங்க யோசிச்சு பார்த்தியா? கொஞ்சம் அமைதியாய் இரு என கூறுகிறார். நாம அமிர்தாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு யோசிக்கலயே. அவர் படிச்சிட்டிருந்ததுனால தானே காத்துக்கிட்டு இருந்தோம். கணேஷ் போனதையே இன்னும் மறக்க முடியல என கூறுகிறார்.

எழில் அமிர்தாவுக்கு போன் செய்து என்னை மன்னிச்சிடுங்க வீட்ல கேட்டதும் என்னால மறைக்க முடியல அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீங்க என்ன முடிவு வேணாலும் எடுங்க ஆனா என்கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதீங்க என சொல்ல அமிர்தா போனை கட் செய்து விடுகிறார்.

வீட்டுக்கு வந்த எழில் அம்மா பாக்கியாவிடம் பெருசா போயிட்டு இருந்த பிரச்சனைக்கு என்னால என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துட்டேன். ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத் தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என கூறுகிறார். நல்லதை நினைத்து செய்தால் கடைசியில் எல்லாம் நன்றாகத்தான் முடியும் என பாக்கியா கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.