மாறி மாறி பாக்கியாவை குடும்பத்தார் காயப்படுத்துகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா செழியினை சாப்பிட்டு போ என சொல்ல வேண்டாம் சாப்பாடு போட்டுட்டு அதுக்கப்புறம் தியாகி மாதிரி சொல்லி காண்பிப்பீங்க. எமோஷனல் பிளாக் மெயில் செய்யுங்க. நீங்களும் வேண்டாம் உங்க சாப்பாடு வேண்டாம் என சொல்ல தாத்தா செழியனை திட்டுகிறார். பிறகு இனியா தலை வராமல் கீழே வர பாக்கியா தலை வார போக நீ ஒன்றும் பாச ட்ராமா போட வேண்டாம். எனக்கு உன்ன பார்த்தாலே புடிக்கல என மேலே சென்று விடுகிறார்.
இதனையடுத்து ஈஸ்வரி பாக்கியா நீ ஆபீஸ்ல இருந்தபோது அம்மா அம்மா நீ அழுதுகிட்டு இருந்த குழந்தை மனசுல நீ இப்ப எப்படி பதிவாகி இருக்க பாரு நீ பண்றது ரொம்ப தப்பா இருக்கு என சொல்லி உள்ளே சென்று விடுகிறார். ஏன் நீ போய் வேலையை பாருமா, இதை எல்லாம் கண்டுக்காத நான் இனியாவ சமாதானப்படுத்துறேன் எல்லாம் சரியாகிவிடும் என கூறுகிறார்.
அடுத்ததாக ரூமுக்குள் கோபிநாத் அப்பா ஈஸ்வரியிடம் நீ சொன்னது தான் நடந்தது. அந்தப் பையன் நேரா இங்க இருந்து அந்த ராதிகா வீட்டுக்கு தான் போயிருந்தான் என சொல்லி ராதிகா வீட்டுக்கு போய் சத்தம் போட்ட விஷயங்களை கூறுகிறார். அடுத்ததாக அவர்களை சந்தித்து விட்டு வரும்போது அமிர்தா உங்கள் முகமே சரியில்லை என்னாச்சு என கேட்க அப்பா அம்மா இருவரும் விவாகரத்து வாங்கிய விஷயத்தை கூறுகிறார்.
பிறகு ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரி கோபியை எங்க மறைச்சி வச்சிருக்கீங்க என சத்தம் போட ராதிகா கோபி இங்கே இல்லை புரிந்துகோங்க என சொல்ல ஈஸ்வரி கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார். முந்தானையில மறைச்சு வச்சிருக்கியா என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.