கோபியிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் பாக்கியா. பங்ஷன் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் ராதிகா.
Baakiyalakshmi Episode Update 21.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் ரூமுக்கு சென்ற பாக்கியாவிடம் கோபி இப்போ உனக்கு சந்தோஷமா இருக்கா. அவரு என் ஆஃபீஸை மூடிட்டு உன் கேட்டரிங்ல வேலை செய்யச் சொல்கிறார். என்ன நினைச்சுட்டு இருக்காரு அவரு என கூறுகிறார்.
பாக்கியா அமைதியாகவே இருக்க எதுக்கு சிலை மாதிரி வாய மூடிட்டு இருக்க என சொல்ல நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா என கேட்கிறார். பிறகு பாக்கியா உங்களுக்கு ஏதாவது ஒரு சின்னதா நல்லது நடந்தா கூட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா நீங்க எனக்கு ஏதாச்சு நல்லது நடந்தால் மட்டும் ஏன் சந்தோஷப்பட மாட்றிங்க? நான் வீட்ல இருந்த போது என் பிரண்டோட உன் பொண்டாட்டிய பாரு இந்த வேலை செய்றாங்க அந்த வேலை செய்றாங்க நீ தத்தி, பட்டிகாடுனு திட்டுவீங்க. இன்னைக்கு எனக்கு தெரிஞ்ச சமையல் வைத்து ஒரு சின்னதா கேட்டரிங் தொடங்கி நாலு பேருக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.
ஒரே ஒரு சின்ன விஷயத்தை கூட எனக்கு நீங்க ஆதரவா இருந்ததில்லை. வீட்ல சமைக்காத நீங்க சொன்னதுனால தான் உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து இன்னொரு இடத்தை பார்த்தேன். அங்கு கூட நீங்க சந்தோசமா இல்ல. நீங்க எங்க போனீங்கனே தெரியலை. எல்லாரும் உங்க புருஷனுங்க எங்கனு கேட்கும் போது என்ன பதில் சொல்றதுனு எனக்கு தெரியல.
உங்ககிட்ட எதையுமே எதிர் பார்க்கக் கூடாதுன்ன நான் பல வருஷம் முன்னாடியே தெரிஞ்சுகிட்டேன். ஆனா இன்னைக்கு கஷ்டமா இருக்கு. இன்னிக்கு என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான நாள். ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு என கண் கலங்கி அழுது விட்டு வெளியே செல்கிறார்.
இந்த பக்கம் மயூ பாக்கியா வீட்டு ஃபங்ஷன் போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அம்மா பங்க்ஷன் நல்லா கிராண்டா இருந்தது. ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் சிறப்பு விருந்தினராக வந்து இருந்தாங்க என சொல்வதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பிறகு மயூ போட்டோவை காட்ட அதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.
இந்த பக்கம் பாக்கியா புதிய வீட்டில் சமைத்து கொண்டிருக்க அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இது குடும்பம் நடத்தும் இடம். இந்த இடத்தில ஹோட்டல் நடத்தக்கூடாது எல்லாத்தையும் காலி பண்ணுங்க என கூறுகின்றனர். இது ஹோட்டல் இல்லை என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த பிரச்சினை குறித்து பாக்கியா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல கோபி உனக்கு வர பிரச்சனையை சமாளிக்க முடியுமா பிசினஸ் எடுத்து நடத்து. இல்லனா இழுத்து மூடு என கூறுகிறார்.
இதனாலதான் நீ எது பண்ணாலும் நான் சந்தோஷப் படுத்துவது கிடையாது என கூறுகிறார். பிறகு கோபி ஆபீசுக்கு கிளம்பி விட பாக்யாவின் மாமனார் அவன் கிடக்கிறான், நாளைக்கு நான் வந்து பேசுறேன். பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் இல்லை என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.