ராதிகா விபத்தில் சிக்க பதறியடித்து ஓடிவந்தார் கோபி.
Baakiyalakshmi Episode Update 16.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியா காலையில் எழுந்து பால் குடிக்கக் கீழே வர அப்போது புதிய ஆபீசை சினிமா பிரபலம் ஒருவர் திறக்க இருப்பதாக பாக்கியா கூறுகிறார். உடனே இனியா நக்கலடித்து சிரிக்கிறார். மேலும் இன்னைக்கு கட்டுரைப் போட்டிக்கான ரிசல்ட் வருது. ஆனா எனக்கு பரிசு எல்லாம் கிடைக்காது என கூறுகிறார்.
இந்த பக்கம் கோபி ராதிகாவின் நினைவால் எந்தவித வேலையும் செய்யாமல் அனைத்தையும் தள்ளிப் போடச் சொல்கிறார். ராதிகாவின் போட்டோவை பார்த்து அவருக்கு போன் செய்ய முயற்சிக்கலாம் என யோசித்துக் கொண்டு இருக்கின்றார். ஒரு கட்டத்தில் ராதிகாவுக்கு போன் செய்கிறார். அந்த நேரத்தில் அப்பா சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வரவே உடனே போனை கட் செய்து விடுகிறார்.
இந்த பக்கம் பாக்கிய வைதேகி இருவர் வீட்டிற்கு வந்து பத்திரிகையில் இருந்து வருவதாகவும் உங்களை பேட்டி எடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அதன்பிறகு இன்னைக்கு சாயங்காலம் எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.
இந்த பக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்த ராதிகாவிற்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிறகு ராதிகா வீட்டில் மயூ மட்டும் தனியாக இருக்க அவரது பாட்டி கடைக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் வீட்டிற்கு ஒரு போன் வருகிறது. ராதிகாவிற்கு அடிபட்டு விட்டது என போனில் ஒருவர் சொல்வதைக் கேட்டு மயூ அழுகிறாள். உடனே பாட்டிக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கோபிக்கு போன் செய்து அழுதுகொண்டே உண்மையை சொல்ல பதறிப்போன கோபி ஐந்து நிமிடத்தில் அங்கே வருகிறேன் என கூறுகிறார்.
இந்த பக்கம் பாக்கியா பேட்டி கொடுக்க அழகாக தயாராகி நின்றுகொண்டிருக்க அந்த நேரத்தில் இனியா கட்டுரைப் போட்டிக்கு முதல் பிரைஸ் கிடைத்துவிட்டதாக கையில் கோப்பையுடன் வருகிறார். பேக்கு பாக்கியா மேக்கப் எல்லாம் போட்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்த இனியா ஏதாச்சு கல்யாணத்துக்கு போறியா என கேட்கிறார். பத்திரிகையிலிருந்து பேட்டி எடுக்க வராங்க என கேள்வி பட்டதும் இனியா உற்சாகம் ஆகிறார்.
இந்த பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த கோபி மயூவிடம் உனக்கு யார் போன் பண்ணது என விசாரித்து அந்த நம்பருக்கு போன் செய்து ராதிகா குறித்து கேட்கிறார். பிறகு பாட்டியுடன் நம்பர் உன்கிட்ட இருக்கிற நம்ம போற வழியில போன் பண்ணி இருக்கலாம் என சொல்லிவிட்டு மயூவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இந்த பக்கம் பாக்யாவில் பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் வந்துவிட்ட நிலையில் ஹாலில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.