மொத்த குடும்பத்தையும் கூட்டி எழில் அனைவருக்கும் எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 07.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியா ஸ்கூலில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்கள் என ஜெனியிடம் உதவி கேட்க பாக்கியா நான் எழுதிக் கொடுக்கிறேன் என அதை வாங்கி எழுதிக் கொடுக்கிறார். இதுல உனக்கு எது வேணுமோ அதை எடுத்து எழுதுக என கூறி கொடுக்கிறார். அதுக்கெல்லாம் நேரமில்லை இது அப்படியே கொடுத்து விடுகிறேன் நீ அவ்வளவு நல்லா எழுதி இருக்க மாட்ட என இனியா கூறுகிறார். தமிழ் மிஸ் கிட்ட திட்டு வாங்காமல் இருந்தால் போதும் என சொல்கிறார். மறுநாள் காலையில் கோபியும் ஈஸ்வரி மற்றும் இனியா ஆகியோர் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் வெளியில் இருந்து வந்த எழில் டிவியில் பென்டிரைவ் ஒன்றை இன்செர்ட் செய்துவிட்டு பாக்கியாவை அழைக்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படும் : அமித் ஷா உறுதி
பாக்கியா நான் வேலையா இருக்கேன் என்னடா என கேட்கிறார் கிச்சனுக்கு போனேன் எழில் அவரை கையோடு கூட்டி வந்திருக்கிறார். பிறகு தன்னுடைய தாத்தாவையும் அழைக்கிறார். அவரும் வந்த பிறகு செழியன் மற்றும் ஜெனியை அழைக்கிறார். எல்லோரையும் ஒன்றாக அழைத்து டிவியை ஆன் செய்கிறார். ஈஸ்வரி ஃபுட், ஈஸ்வரி மசாலா, ஈஸ்வரி கேட்டரிங் ஆகியவற்றிற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டு காண்பிக்கிறார். அனைவரும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்து போகின்றனர். அந்த அளவிற்கு சூப்பராக இருப்பதாக எல்லோரும் பாக்கியாவையும் எழிலையும் பாராட்டுகின்றனர். பாக்கியாவும் சூப்பராக வந்திருப்பதாக கூறுகிறார். கோபி இடம் பாக்கியா இது குறித்து கேட்க சூப்பராக வந்திருக்கு, எழில் நல்ல கான்செப்ட் நல்லா பண்ணி இருக்க எனப் பாராட்டுகிறார்.
Birthday Celebration Of Thieyash Sai & Shaviya Sai – S/O Manager To Vishal!
அவருடைய தாத்தா அருமையா இருக்கு திரும்பவும் போடுடா என முதலில் இருந்து மீண்டும் பார்க்கின்றனர். பாக்கியா விளம்பரம் சூப்பராக வந்திருப்பது எண்ணி உற்சாகம் அடைகிறார். இது டிவியில் எல்லாம் வருமா என ஈஸ்வரி கேட்க இல்ல பாட்டி போன்ல கம்ப்யூட்டரில் தான் வரும் என எழில் கூறுகிறார். டிவில எல்லாம் வராதா அதுக்கு இவளுக்கு இவ்வளவு சந்தோஷமா என கிண்டல் அடிக்கிறார். உடனே கோபி இல்லமா டிவி அளவுக்கு இல்லைன்னாலும் சோசியல் மீடியாவில் இன்னைக்கு நல்ல ரீச் இருக்கு என சொல்கிறார். இன்னைக்கு இதனால் எல்லா சோசியல் மீடியாவிலும் போடப் போகிறேன் என எழில் கூறுகிறார். நீ எப்படி பாப்புலர் ஆகிறனு மட்டும் பாருமா என சொல்கிறார்.
அதன்பிறகு ஜெனி மற்றும் இனியா இருவரும் சேர்ந்து பாக்யாவுக்கு சோசியல் மீடியாவில் விளம்பரத்தை எப்படி பார்ப்பது ஃபேஸ்புக் என்றால் என்ன என சொல்லிக் கொடுக்கின்றனர். பிரெண்ட் ரெக்வஸ்ட் எப்படி கொடுக்கிறது என சொல்லித் தருகின்றனர். பிறகு ஈஸ்வரி மசாலா பாக்கியலட்சுமி என்ற பெயரில் இரண்டு கணக்குகளை தொடங்குகின்றனர். பாக்கியலட்சுமி என்ற பெயரில் வேண்டாம் பாக்கியா கோபிநாத் என்ற பெயரில் வேண்டும் என கூறுகிறார். அதற்கு அடுத்ததாக லைக் பற்றிப் பேச அப்படினா என்ன என பாக்கியா கேட்கிறார். உடனே இனியா இங்க பாரு நான் ஒரு போட்டோ போட்டு இருக்கேன் இவ்வளவு பேரு அதற்கு லைக் பண்ணி இருக்காங்க என காட்டுகிறார். இவங்கலாம் யாருடைய நம் முன்ன பின்ன பார்த்ததே இல்லை என பாக்கியா சொல்ல இனியா இவங்கள என்ன ஃபாலோ பண்றாங்க என கூறுகிறார். உடனே ஐயோ எனது பாலோ பண்றாங்களா ஸ்கூலுக்கு போகும் போது உன் பின்னாடி வராங்களா என கேட்கிறார். ஈஸ்வரி உட்பட அனைவரும் சிரிக்கின்றனர். நான் இனி உனக்கு சொல்லித் தர முடியாது என்ன விடு என இனியா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு ஜெனி அனைத்தையும் சொல்லித் தருகிறார்.
இந்த பக்கம் எழில் அமிர்தா வீட்டிற்கு சென்று குழந்தையிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தாவின் அம்மா அவர்களை அழைக்க அவர் வேலையாக இருப்பதாக கூறுகிறார். அப்படி என்ன வேலை செய்கிறார் என கேட்க அவருடைய அப்பா விடு இருக்கிற வேலையை முடிச்சுட்டு வரட்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.