மருத்துவமனையில் ராதிகா ஒரு பக்கம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட பாக்கியா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா தான் கோபியின் மனைவியான ஒரு நர்ஸ் அவரிடம் எம் ஆர் எஸ் ஸ்கேன் எடுக்க வேண்டும் பணம் கட்டிட்டு வாங்க என இரண்டாவது ப்ளோருக்கு அனுப்பி வைக்க அந்த நேரத்தில் பாக்கியா உள்ளே நுழைந்து என்னாச்சு ஏதாச்சு என விசாரிக்கிறார்.
பிறகு ராதிகா பணம் கட்டிய பிறகு எம் ஆர் எஸ் கேன் எடுப்பதற்காக கோபியை மேல அழைத்துச் செல்ல பாக்யா கீழே இருந்து விட ராதிகா மேலே சென்று எம்ஆர் ஸ்கேன் எடுக்கும் இடத்தில் நிற்கிறார். பிறகு டாக்டரை பார்த்து பேச ராதிகா செல்ல நர்சு ஒருவர் ரிப்போர்ட் வந்துவிட்டது அவங்க மனைவி டாக்டரை பார்த்து பேசிகிட்டு இருக்காங்க என்ன சொல்ல பாக்கியா அதிர்ச்சடைந்து யார் அவர் என பார்க்க மேலே செல்கிறார்.
அதற்குள் ராதிகா கீழே இறங்கி வந்து கோபி அறைக்குள் சென்றுவிட பாக்கியா மேலே சென்று தேடுகிறார். பிறகு நர்ஸ் இடம் அவங்க மனைவி டாக்டரிடம் பேசிக்கொண்டிருக்கிறதா சொன்னீங்க அங்கு யாரும் இல்லை என கேட்க அவங்களுடைய ஹஸ்பண்டை பார்க்க போயிருப்பாங்க என சொல்ல அதிர்ச்சியடைந்த பாக்கியா கோபியின் ரூமுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
பாக்யாவும் ராதிகாவும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்வார்களா மாட்டார்களா என்ற கேள்விக்கு திங்கட்கிழமை பதில் கிடைக்கும்.