Atlee Next Plan
அட்லீக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் கொடுக்கவில்லை எனவும் அதனால் அட்லீ முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகவும் தகவல் ஒன்று உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து அதன் பின்னர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் இந்த படங்கள் காப்பி எனவும் அட்லீ பட்ஜெட்டை இழுத்து விடுகிறார் என்ற குற்றசாட்டும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

இதனால் அட்லீக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் கொடுக்க கூடாது என மறைமுக ரெட் கார்ட் போடப்பட்டு இருப்பதாகவும் இதனால் அட்லீ தானே இயக்கி தானே நடித்து தானே தயாரித்து வெளியிட திட்டமிட்டு இருப்பதாக வைரலாகும் தகவல் கூறுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பதை அட்லீயின் அடுத்த பட அறிவிப்பு தான் உறுதி செய்யும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.