அட்லீயின் அடுத்த படத்திற்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் பெரிய ஆப்பாக வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பிரபல பத்திரிகையாளர்கள் பேசி கொள்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனரானவர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார் அட்லீ.

இந்த மூன்று படங்களுக்குமே அட்லீ பட்ஜெட்டை இழுத்து விட்டு விட்டார், இது இந்த படத்தின் கதை என தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வந்திருந்தன.

மேலும் பிகிலை தொடர்ந்து அட்லீ பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த படம் கிட்டத்தட்ட டிராப்பாகி விட்டதாக கோலிவுட் பத்திரிகையாளர்கள் பேசி கொள்கின்றனர்.

அதற்கு காரணம் அட்லீ ஷாருக்கான் படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் பிகில் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி அட்லீயை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பிகில் தயாரிப்பு நிறுவனம் அட்லீயால் எங்களுக்கு நிறைய பொருளாதார இழப்பும் மனக்கஷ்டமும் தான் வந்தது என கூறி விட அந்த தயாரிப்பாளர் அட்லீ படத்தை தயாரிக்கும் எண்ணத்தையே கை விட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

அட்லீ ஷாருக்கான் படத்தின் அறிவிப்பை பொறுத்து தான் இது உண்மையா? பொய்யா? என்பது தெரிய வரும்,

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.