
அட்லியின் அடுத்த ஹீரோ விஜய் இல்லை என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் வைத்து ஜமால் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படம் கை முடித்து விஜயுடன் இணைய போவதாக சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் அன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அட்லி அடுத்ததாக விஜய்யை இயக்கப் போவது இல்லை. மீண்டும் ஹாலிவுட் சினிமாவில் தான் ஒரு படத்தை இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆமாம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான வருண் தவானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.