Ashwin Speech
Ashwin Speech

Ashwin Speech – இந்திய அணியில் தற்போது நிறைய மாற்றங்களும் எதிர்ப்பாராதா சேர்ப்பு மற்றும் நீக்கம் நடந்து கொண்டு இருக்கின்றது.

மூத்த வீரர்கள் ஓய்வு மற்றும் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக பல மாற்றங்களை இந்திய அணியில் நடத்தியது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

இந்த மற்றம் பலருக்கு வாய்ப்பு வழங்கிய அதே நேரத்தில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்த வகையில் இந்திய அணியில் முன்பு சிறப்பாக பந்து வீசிய சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் அவருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியின் முன்னனி சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார் . இதுகுறித்து அஸ்வின் முதன் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.

“ஒரு நாள் போட்டியில் என்னுடைய செயல்பாடுகள் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு மோசமாக இருந்ததில்லை.

தற்போது மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்கள். அதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017ல் விளையாடிய போட்டியில் நான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன்.

என்னுடைய முந்தைய ஆட்டங்களை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு.

அதைவைத்து பார்க்கும் போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தேர்வு செய்யபடவில்லை. அதற்கும் என்னுடைய ஆட்டத் திறனிற்கும் சம்பந்தமில்லை” இவ்வாறு கூறியுள்ளார்.

அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதும் இல்லை, வாய்ப்பு கிடைத்த அனைவரும் சாதிப்பது இல்லை.

சாதனை படைத்த அனைவரும் தொடர்ந்து இருப்பதும் இல்லை. தேவைக்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் தேவைபடுகிறது.