anbumani ramadoss about mk stalin
anbumani ramadoss about mk stalin

விக்கிரவாண்டி: “நான் ஸ்டாலினுக்கு ஒரு புது பேரு வெச்சிருக்கேன், புளுகுமூட்டை ஸ்டாலின்.. வாயை திறந்தால் பொய்..” இவ்வாறு பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராமதாஸ், திமுகவையும், அக்கட்சி தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் பேசியதாவது: ” நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்., வெற்றி பெற்று ஸ்டாலின் முகத்தில் கரியை பூச வேண்டும். இந்த தேர்தல் நமக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போட்டி..!” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்டாலினுக்கு நான் ஒரு புது பெயர் வைத்திருக்கிறேன். அதாவது புளூகுமூட்டை ஸ்டாலின்!வாயை திறந்தாலே பொய்.. பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது. போன மக்களவை தேர்தலில், அவ்வளவு பொய்யை சொன்னார். அவர் சொன்ன முக்கியமான ஒரு பொய், நாங்கள் வெற்றி பெற்றால், நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்பது தான்.

தமிழ்நாடு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. 39 மக்களவை தொகுதியில் 38 வென்றார். ஆனால், அவர் சொன்ன வாக்குறுதி, இதுவரை செய்யவில்லை. அதேபோன்று, விவசாய கடன் தள்ளுபடி, கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் போன்ற எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

எனவே அவர் கூறும் வார்த்தை அனைத்துமே பொய்.. என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து, வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறோம். இத்திட்டத்தை சட்டப் பேரவையில் ஆதரித்த ஸ்டாலின், பிறகு வெளியே வந்து எதிர்க்கிறார்.

மேலும் நீட் தேர்வுக்கு அடிகோலியதும், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்ததும் இவங்க ஆட்சியில் தான். ஆனால், இத்திட்டங்களை தற்போது எதிர்த்து தேர்தலின் போது பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்.

இதெற்கெல்லாம் இந்த இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்., இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால், பல திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள். ஆனால் எதிர்கட்சி வெற்றி பெற்றால் எதுவும் பயனிருக்காது’ இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்தார் அன்புமணி ராமதாஸ்.