முத்து விரித்த வலையில் அருண் சிக்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அருண் சீதாவை கல்யாணம் பண்ணிய பிறகும் முத்துவை சீதாவின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேம் ஆடி வருகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் முத்து அருணை வந்து சந்தித்து என்ன குடும்பத்துக்குள்ள கெட்ட பேர் உண்டாக்கறதுக்கு என் மேல பழி போடறதுக்கு எதுக்கு இப்படி சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க என்று கேட்கிறார். உன் மேல சீதாவுக்கு வெறுப்பு வரணும் என்றதுனால தான் உன் மேல மரியாதை வச்ச சீதாவுக்கு உன் மேல வெறுப்பு வந்துருச்சு பாத்தியா என்று கேட்கிறார்.
உடனே சிரித்த முத்து நிஜமாகவே உன்னை அடிக்க ஆளை கூட்டிட்டு வந்திருக்க என்று சொல்லி இப்போ நீங்க வெளிய வரலாம் என போனில் சொல்ல மீனாவும் சீதாவும் காரில் இருந்து இறங்கி வருகின்றனர் சீதா அருண் பேசியதை எல்லாம் கேட்டுவிட்டு அதிர்ச்சியாக நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.