மனோஜால் உடைந்த அண்ணாமலை, ரோகினியின் கழுத்தை நெரித்த மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் அண்ணாமலை உடைந்து அழுதுள்ளார்.

siragadikkaaasai serial today episode update 29-12-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜுக்காக பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். பணம் கொடுத்த நபர் பணம் மட்டும் சரியான தேதில வரல நான் உங்க குடும்பத்துல இருந்து கண்டிப்பா ஒரு ஆளை தூக்கிட்டுவேன் என்று சொல்லி மிரட்டி விட்டுப் போக, முத்து மனோஜ் மீது கோபப்படுகிறார். உடனே மனோஜ் எனக்காக யாரும் கஷ்டப்படுத்தவில்லை சொத்துல என்னோட பங்கு பிரிச்சு கொடுத்துடுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல இன்னும் முத்து கோபப்பட்டு மனோஜ் அடித்து விடுகிறார்.

தடுத்து நிறுத்திய விஜயா மனோஜிடம் கோபப்பட்டு பேச எல்லா இவளால தான் முதல்ல பணக்காரன்னு சொன்னா இப்போ இந்த ஆர்டர் வாங்கி கொடுத்து என் பையன கடங்காரியாக்கி வைத்திருக்கிறார். என்று சொல்லுகிறார். மனோஜ் நீங்க அப்பா கிட்ட பேசுங்கம்மா சொத்து பேசி கொடுக்க சொல்லுங்க என்று சொல்ல உடனே விஜயா ஏன் அதையும் கொடுத்துட்டா உன் பொண்டாட்டி எங்களை நடு தெருவில் நிறுத்திடுவார் பிச்சை எடுக்கவா என்று கேட்கிறார் அதெல்லாம் நான் ஒரு நாளைக்கு சொல்ல மாட்டேன் நான் சாகுற வரைக்கும் இந்த வீடு யாருக்கும் பிரித்துக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கோபமாக ரூமுக்கு வந்த மனோஜிடம் கிரிஷ் டாடி என்று கட்டிப்பிடிக்க யாருடா டாடி என்று தள்ளி விடுகிறார் உடனே ரோகினி வந்து எதற்காக அவனை தள்ளிவிட்டா என்று சொல்ல கல்யாணி ஆவியிருப்பதாக நினைத்து விட்டு மனோஜ் ரோகினியின் கழுத்தை போட்டு நெறிகிறார். உடனே ரோகினி மனோஜை தள்ளி விட்டு எதுக்கு கழுத்தை என்று சொல்ல சாரி ரோகிணி என்று சொல்லிவிட்டு சென்றுவிட ரோகினி வருத்தப்படுகிறார்.

பிறகு மீனாவிடம் க்ரிஷ் மனோஜ் அடித்த விஷயத்தை சொல்லி அழுது கொண்டிருக்க முத்து வந்து கேட்க அது எப்படி அவன் சின்ன பையன் மேல கை வைப்பான இப்பவே போய் கேக்குறேன் என்று சொல்லி கோபப்பட்டு எழுந்திருக்க மீனா சமாதானப்படுத்தி உட்கார வைக்கிறார். பிறகு மூவரும் தூங்கிவிட அண்ணாமலை தூக்கம் இல்லாமல் ஹாலில் வந்து கண்கலங்கில் உட்கார வீணா கவனித்து விட்டு சொல்ல இருவரும் அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். சொத்து பிரித்து கொடுக்கலான்னு முடிவு பண்ணிட்டேன் என்று அண்ணாமலை சொல்லுகிறார். நீ ஏம்பா இப்படி சொல்ற என்று கேட்க அதெல்லாம் அவங்க கல்யாணம் பண்ணி இருக்கும்போதே சொத்து பிரித்து இருக்கணும் நாளைக்கு வக்கீல் வர சொல்ல போகிறேன் என்று சொல்ல நீ அதெல்லாம் எதுவும் யோசிக்காதப்பா நீ போய் தூங்கு காலைல பேசிக்கலாம் என்று சொல்லி படுக்க வைத்து விட்டு முத்து அப்பாவையே கண் கலங்கி உட்கார வச்சுட்டானே என்ற கோபப்பட்டு மனோஜ் ரூம் கதவை தட்டுகிறார்.

மனோஜ் வெளியில் வந்த உடன் முத்து கோபப்பட்டு அடிக்கப் போக ரோகிணி இப்ப எதுக்கு நடு ராத்திரி கதவு தட்டி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட மீனா என்ன ரோகினி என்றும் மிரட்ட அமைதியாகிறார். பிறகு மீனா என்ன சொல்லுகிறார்? பார்வதியின் கதை என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 29-12-25
annamalaiepisodemanojMeenaMuthuRohiniSiragadikkaAasai Serialsiragadikkaaasai serial today episode update 29-12-25todayvijaytvஅண்ணாமலைக்ரிஷ்சிறகடிக்க ஆசைமனோஜ்மீனாமுத்துரோகினி