குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடி உள்ளார். குடும்பத்துடன் க்யூட்டான போஸ்களை கொடுத்து நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருவது மட்டுமில்லாமல் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.