கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் ஒன்று போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது கூலி படம் தொடங்கும் முன்னரே தயாரிப்பு நிறுவனத்திற்கு லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் ஒன்று சொல்லியுள்ளார். படம் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை தீர்மானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்துள்ளார்.
ஏற்கனவே கைதியிலேயே படங்களுக்கு ரிலீஸ் தேதியை முன்கூட்டியே தீர்மானித்து விட்டதால் திட்டமிட்டபடி சில இடங்களில் படப்பிடிப்பு நடக்க தாமதம் ஏற்பட்டு அவசர அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை மனதில் கொண்டு லோகேஷ் கனகராஜ் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் கூலி படத்தின் எடிட்டிங் செய்து முடித்துவிட்டு படம் பார்த்த பிறகு தான் ரிலீஸ் தேதியை அறிவித்திருப்பதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.