பாக்யா சொன்ன விஷயம், கதறி அழும் சந்திரிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா சொன்ன விஷயம் கேட்டு சந்திரிகா கதறி அழுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 01-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் கண்டிப்பா இனியா தள்ளி விட்டு நித்திஷ் செத்து இருக்க மாட்டான் சுதாகர் தான் கொலை பண்ணி இருப்பான் என்று சொல்ல பிறகு பாக்யாவிடம் நீ வேலை பாக்குற இடத்துல நிதிஷ் பேமிலி பற்றி விசாரிச்சு சொல்லு என்று சொல்ல இனியாவும் விசாரிக்கிறார் பிறகு தான் நித்திஷ் அம்மா சந்திரிகா ஏற்கனவே ஒரு பணக்காரருடன் திருமணம் ஆனவர் நித்திஷ் அவர்களுக்கு பிறந்த குழந்தை என்றும் சுதாகர் நிதிஷ் அம்மா கம்பெனியில் வேலை பார்த்த நபர் என்றும் அவர் திருமணம் செய்து கொண்டு மொத்த ப்ராப்பர்ட்டையும் இவரது பெயரில் வாங்கி இருப்பதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வரும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விஷயங்கள் குறித்து இனியா குடும்பத்தினரிடம் சொன்னவுடன் கண்டிப்பாக இதை சுதாகர் தான் செஞ்சிருப்பார் என்று ஒரு அளவுக்கு முடிவெடுத்து விட்டு சரி நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று செய்திகள் சொல்ல பாக்யா வேண்டாம் நம்ம நிதிஷ் அம்மா கிட்ட பேசினா இதுக்கான உண்மை தெரியும்னு எனக்கு தோணுது என்று சொல்ல அங்க எதுக்கு போகணும் நம்ம கிட்ட தான் தேவையான ஆதாரம் இருக்கு என்று சொல்லுகிறார். ஆனால் பாக்யா அங்க போறது நல்லதுன்னு தோணுது என்று சொல்லிவிட்டு நால்வரும் சுதாகர் விட்டு முன் வந்து நிற்கின்றனர்.

ஆனால் உள்ளே சுதாகர் இருப்பதால் அவரை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசித்துக் கொண்டு வெளியில் நின்று கொண்டிருக்க ஆகாஷ் நீங்க சுதாகரோட நம்பரை என்கிட்ட குடுங்க என்று சொல்லி வாங்கி சுதாகருக்கு ஃபோன் போட்டு நீ நித்திஷ கொலை பண்ண விஷயம் எனக்கு தெரியும் ஆதாரம் என்கிட்ட தான் இருக்கு என்று சொல்ல சுதாகர் அதிர்ச்சி அடைகிறார். உடனே என்ன சொல்ற யார் நீ என்று கேட்க அதெல்லாம் உனக்கு தேவையில்ல என்று சொல்லிவிட்டு நான் சொல்லும் இடத்திற்கு வந்தேன் நான் அந்த ஆதாரத்தை காட்டுகிறேன் என்று சொல்ல சுதாகர் பதறி அடித்துக் கொண்டு காரின் கிளம்ப எழில் எனக்கு ஒரு வேலை இருக்குமா நான் கிளம்புறேன் நீங்க போய் உள்ள பேசுங்க என்று சொல்ல செழியன் மற்றும் பாக்யா இருவரும் சந்திரிகாவை சந்தித்து பேசுகின்றனர். இவர்களைப் பார்த்தவுடன் டென்ஷனான சந்திரிகா டைவர்ஸ் கேட்டீங்களா வாங்கி தொலச்சுட்டு போக வேண்டியது தானே என் புள்ளையை அநியாயமா கொன்னுட்டீங்களே எனக்கு இருக்கிறது ஒரே பையன் நான் உங்களை சும்மா விடமாட்டேன் பழி வாங்குவ என்று கோபப்பட்டு பேச நாங்க சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்கள் என்று பாக்யா சொல்லுகிறார்.

ஒன்னும் கேக்க வேண்டாம் வெளியே போங்க என்று பாக்யாவை பிடித்து தள்ள உடனே பாக்யா கோபப்பட்டு உங்க பையன கொலை பண்ணது நாங்க இல்ல சுதாகர் தான் என்று சொல்லுகிறார் உடனே சந்திரிகா அதிர்ச்சியாகி என் புருஷன் மேலே பழி போடுறீங்களா அவர் எதுக்கு அவர் பையன கொலை பண்ணனும் என்று கேட்கிறார். நீ நான் என் புருஷன் மேல பழைய போடாதீங்க என்று கோபப்பட நிதிஷ் அவரோட பையன் இல்லைன்றது எங்களுக்கு தெரியும் என்று சொல்லுகிறார் எங்களுடைய குடும்ப விஷயத்தை தெரிஞ்சுகிட்டு வந்து எங்களை மிரட்ட பார்க்கிறீர்களா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை என்று சிசிடிவி கேமரா வீடியோவை காட்ட அவர் அந்த இடத்தில் போனா அவரு கொலை பண்ண தான் அர்த்தமா என்று கேட்க பிறகு கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சுதாகர் நிதிஷிடம் *தை பொருள் விக்க ஆரம்பிச்சிட்டியா என் மானத்தை போக்காமல் விடமாட்டியா உன்னை கொலை பண்ணிடுவேன் என்று மிரட்டியதை நினைத்துப் பார்க்கிறார் உடனே அப்ப நீங்க தான் அவன கொலை பண்ணிட்டீங்களா என் புள்ளையை நான் தடுத்து நிறுத்தி இருக்கணும் என் பிள்ளை கிட்ட பேசி இருக்கணும் நான் தப்பு பண்ணிட்டேன் என்று கதறி அழுகிறார். பாக்யா அவருக்கு ஆறுதல் கூற பிறகு என்ன நடக்கிறது? பாக்யா என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 01-08-25
BaakiyaBaakiyaLakshmi SerialBaakiyaLakshmi Serial Today Episode Update 01-08-25ChandrikagopiineyaSudhagarvijaytvஎழில்சந்திரிகாசுதாகர்செழியன்நிதிஷ்பாக்கியலட்சுமிபாக்யா