இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் ஆலியா மானசா.

தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார்.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்‌. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு மீண்டும் கர்ப்பமான ஆல்யா மானசா இரண்டாவது பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.

சீரியலில் இருந்து விலகிய ஆலியா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஆமா கொஞ்சம் குண்டாகிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.