திரையரங்குகள் திறப்பு

இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருப்பதாகவும் அஜித்-விஜய் படங்கள் ரி-ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் அமைச்சர் கடம்பூர் ராஜு முதலில் திரையரங்குகளை திறங்கள் பின்பு உங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் என அறிவிக்கப் படாத தால் அது விஜய்யின் பழைய வெற்றிப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

இதனை முதல் நாள் முதல் காட்சி போல கொண்டாட தமிழகம் முழுவதும் உள்ள அஜித், விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திரையரங்குகள் திறப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?? கமெண்ட்டுகள் மூலமா எங்களோட ஷேர் பண்ணிக்கோங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.