கோப்ரா 2 திரைப்படம் உருவாகுமா? என கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோப்ரா. விக்ரம் கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புகளில் நடித்து வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
படத்தின் கிளைமாக்ஸில் பெரிய சொதப்பல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் படத்திற்கு பெரும் நஷ்டம் எனவும் எனவே தயாரிப்பாளர் அஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் முறையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இரண்டாம் பாகம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளதா என ரசிகர் ஒருவர் கேட்க அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்க திட்டமிட்டு தான் படத்தை எடுத்தோம் என தெரிவித்துள்ளார்.