நடிகை சித்தி இட்னானி செய்த நெகிழ்ச்சியான செயலின் வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் பாவை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்து முதல் படத்திலேயே பிரபலமான நடிகையாக மாறி இருக்கும் நடிகை சித்தி இட்னானியின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சித்தி இட்னானி தற்போது ஆர்யாவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி அவர்களுக்கு தேவையான காலை உணவையும் கொடுத்து அங்குள்ள அனைத்து முதியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். இதனைக் கண்டு வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் உங்கள் சிரிப்பை போல உங்க மனசும் ரொம்ப அழகு என அவரை பாராட்டி வருகிறார்கள்.