விபச்சார வழக்கில் சீமராஜா பட நடிகை ஜோதி உட்பட இன்னொரு துணை நடிகையும் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் உள்ள நடிகைகளில் சிலர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தவறாக வழிகளில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜோதி, பத்மா என இரண்டு துணை நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோதி என்பவர் சீமராஜா, தேவராட்டம், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தவர்.
வளசரவாக்கத்தில் விபசாரம் நடைபெறுவதாகவும் இதனை விநியோகிஸ்தர் மோகன் ரெட்டியின் வலது கை பாஸ்கர் என்பவர் தான் நடந்து வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாஸ்கரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் தொழிலதிபர் வேடத்தில் உல்லாசத்திற்காக நடிகைகள் வேண்டும் என கேட்டுள்ளனர். 25,000 பணத்துடன் கோயம்பேடு மார்க்கெட்டில் காத்து கொண்டிருக்குமாறு பாஸ்கர் கூறியுள்ளார்.
போலீசாரும் காத்துக் கொண்டிருக்க பாஸ்கர் துணை நடிகைகளான ஜோதி, பத்மாவுடன் சிக்கியுள்ளார். அதன் பின்னர் பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விநியோகிஸ்தர் மோகன் ரெட்டியையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.