எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை நயன்தாராவின் தம்பி.

Actor Saran in Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை தொடர்ந்து ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஓபிஎஸ் மனைவி இறுதி ஊர்வலம் : பெரியகுளத்தில், இன்று நல்லடக்கம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிகர் சரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் கௌதம் கார்த்தியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“மங்காத்தா” Chain-னின் ரகசியம் 10 வருடங்கள் கழித்து வெளியானது…! | Ajith | Mangatha | Tamil Cinema

மேலும் வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்த இவர் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவின் தம்பியாக நடித்திருந்தார். தற்போது இவர் சூர்யாவுக்கும் வில்லனாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.