இரண்டாவது திருமணம் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நாக சைதன்யா.
Nagachaitanya About Second Marriage : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தென்னிந்திய நடிகையான சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவரும் ஒரு மனதாக விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக அறிவித்தனர்.
இதனையடுத்து இருவரும் அவரவர் பாதைகளில் பயணித்து வரும் நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஆனால் மணப்பெண் கட்டாயமாக நடிகையாக இருக்க கூடாது என கண்டிசன் போட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இப்படியான நிலையில் தற்போது நாக சைதன்யா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது இரண்டாவது திருமணம் பற்றி பரவிய தகவல் உண்மையில்லை. இருவரின் விவாகரத்து வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என நாக சைதன்யா தெரிவித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.