Tamilnadu Government Latest Announcements : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் வருகிறார்.
அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய போது தமிழகத்தில் மகளிருக்கான இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு ரூபாய் 20,000 மானியமாக வழங்கி வருகிறது. இதனை தற்போது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க ரூபாய் 354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் பெண்கள் விடுதி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ள நிலையில் அரசு அதை பரிசீலனை செய்யும் எனவும் தெரிவித்தார்.
வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.