மலையாள திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் பாலா பாஸ்கர். இளம் வயதேயான இவர் கடந்த வாரம் தன்னுடைய 2 வயது மகள் மற்றும் மனைவியுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது கோர விபத்தில் சிக்கினர்.

விபத்து நடந்த இடத்திலேயே 2 வயது மகளை பறி கொடுத்தனர். இசையமைப்பாளர் பாலாவும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கோர விபத்து: 2 வயது மகளை தொடர்ந்து இளம் இசையமைப்பாளரும் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்நிலையில் தற்போது பாலா பாஸ்கரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாலா பாஸ்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.