Yashika Anand Angry
Yashika Anand Angry

Yashika Anand Angry – ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தின் மூலம் இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் கவனம் பெற்றார்.

இதுபோக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் மற்றும் சமுதாய அவலங்களுக்கு எதிராக பேசும் யாஷிகா ஆனந்த்.

தற்போதும் அதுபோல ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் கர்நாடகாவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் நெருப்பு வைத்து கொன்றது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிராக தற்போது பேசியுள்ள யாஷிகா, அவர்களது ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

யாஷிகாவின் இந்த கருத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.