தங்கலான் படத்துக்குப் பிறகு விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்கலாம் என்பதை முடிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். சாதாரண டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்த இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோகிரின் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை விவாதத்திற்காக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டபோது சியான் விக்ரம் தனக்கும் ஒரு கதை சொல்லுமாறு சொல்ல மாரி செல்வராஜ் அவருக்கு ஒரு கதையை உருவாக்கி உள்ளார்.
இதனால் இவர்கள் கூட்டணி இணைவது உறுதியாகி இருப்பதாகவும் விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.