நடிகர் விஜய்யின் திரைப்பயணம் முடிவுக்கு வர இருப்பதாகவும் இனி அரசியலில் ஈடுபட போகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லியோ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதே சமயம் இந்த படத்தை முடித்துவிட்டு ஆறு மாதம் பிரேக் எடுக்கப் போகிறார், இந்த பிரேக் அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக தான் எனவும் தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு உணவு வழங்கினார்.
மேலும் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். கிட்டத்தட்ட 6000 பேர் பங்கேற்கும் வகையில் இது குறித்த நிகழ்ச்சி ஒன்று மதுரவாயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விஜய் தனது எழுபதாவது படத்தோடு நடிப்பதை நிறுத்திக்கொண்டு முழுமையாக அரசியலில் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
அரசியல் வருகை மகிழ்ச்சியளித்தாலும் விஜய் நடிப்பதை நிறுத்த போவதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.