சுசித்ராவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திரிஷா.
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. அடிக்கடி சமூக வளையத்தில் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர் சமீபத்தில் விஜய் திரிஷா குறித்து பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஆனது.
சுசித்ரா பேசிய இந்த பேச்சுக்கு தளபதி விஜய் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய போது அந்த மேடையில் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அதாவது சமூக வலைதளங்களில் வெளியாவது எல்லாம் உண்மை இல்லை அதை அப்படியே நம்பி விடாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகை திரிஷாவும் இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால், உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு