Tirupathi : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற திருப்பதி கோவிலுக்கு, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள், பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் திருமலை அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், குவிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யபட்டு வருகிறது.
ஆனால், இதனால் வனப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, திருமலையில் பெய்யும் மழையின் அளவு குறைந்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
இதன்காரணமாக, இன்று முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருமலை தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
மேலும், திருமலையில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து வைக்க கூடாது.
இத்தடையை மீருவோர்க்கு குறைந்தபட்சம் ரூபாய் 3000 முதல், அதிகபட்சமாக ரூபாய் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது.
மேலும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் , தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.