தளபதி விஜய் ரூல்ஸ் மீறியதாக அவருக்கு போலீசார் ஃபைன் போட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள விஜய் அடுத்ததாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் விஜய் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே லியோ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நடித்து சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது ரூல்ஸ் மாறியதாக காவல்துறை பைன் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரோட்டில் ரெட் சிக்னலை மீறி விஜயின் கார் கார் வேகமாக பறந்து சென்றதால் அவருக்கு பைன் போடப்பட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விதிமுறைகளை மதிக்க வேண்டிய விஜயே இப்படி செய்யலாமா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.