தொடர் வெற்றிகள் காரணமாக நடிகர் சூர்யா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் ஜெய் பீம் சூரரை போற்று திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.
மேலும் விக்ரம், ராக்கெட்ரி போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்திருந்த நிலையில் அவையும் நல்ல வெற்றியை பெற்றுள்ளன. இப்படி தொடர் வெற்றிகளில் திளைத்து வரும் சூர்யா அடுத்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்காக 28 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.