கரோனா வைரஸ் பரவல் காரணமாக அரண்மனை 3 குறித்த அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார் சுந்தர் சி.
Sundar C Decision on Aranmanai 3 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சுந்தர் சி.
இவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து தற்போது ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் உள்ளிட்டோரை வைத்து இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90% முடிவடைந்துள்ளன. கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்றாலும் அரண்மனை மற்றும் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.
ஏனென்றால் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஆயிரம் பேரை வைத்து உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஒரே இடத்தில் ஆயிரம் பேரை கூட்டுவது என்பது பாதுகாப்பில்லாத ஒன்று.
இதனால் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி. மேலும் அவர் வேறொரு கதையை உருவாக்கி வைத்துள்ளார்.
அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.