கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தின் கதை இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
Storyline of KGF3 Movie : கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இரண்டு பாகங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இறுதியில் மூன்றாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் பாகத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இரண்டாம் பாதியில் இறுதியில் யாஷ் தங்கம் அனைத்தையும் முடித்துக் கொண்டு ஒரு கப்பலில் தப்பிச் செல்வது போலவும் அவரை இந்திய ராணுவம் மற்றும் கப்பற்படை சுற்றி வளைக்க அவர் நீருக்குள் மூழ்குவது போலவும் காட்டப்படுகிறது. அது எதிரே ஒரு இந்தோனேஷியா கப்பல் ஒன்று வருவது படம் காட்டப்பட்டது.
இதுதான் மூன்றாம் பாக கதைக்கான அடித்தளம் எனத் தெரியவந்துள்ளது. அதாவது இந்தோனேசிய கப்பல் உதவியுடன் நீர்மூழ்கி கப்பலில் தப்பிச் சென்று உலக அளவில் பெரிய மான்ஸ்டராக உருவெடுக்கிறார் யாஷ். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.
இந்த படத்தின் அறிமுகக் காட்சியே மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தப் படமும் 1000 கோடி வசூலை எட்டுவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.