சிவாஜி வீடு ஜப்தி வழக்கில், கோர்ட் முக்கிய உத்தரவு: நடிகர் பிரபு மகிழ்ச்சி
சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ ஜப்தி வழக்கில், இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. இதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர், சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் தயாரித்த ‘ஜகஜால கில்லாடி’ படத்தை எழில் இயக்க, விஷ்ணு விஷால், சுமதி, யோகிபாபு, நிவேதா பெத்துராஜ், மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, நளினி உள்பட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை தயாரிக்க தன் மனைவியுடன் இணைந்து தனபாக்கியம் என்ற நிறுவனத்திடம் பணம் பெற்றிருக்கிறார் துஷ்யந்த். ஆனால், உரிய நேரத்திற்குள் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதனால், அந்த நிறுவனம் துஷ்யந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர; விசாரித்த
நீதிமன்றம்; சிவாஜிக்கு சொந்தமான அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது. ஆதலால், ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில்,
‘தனது தந்தை இருக்கும்போது அன்னை இல்லத்தை தனது பெயரில் மாற்றிவிட்டார். அன்னை இல்லத்தில் ராம்குமாருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்கும்போது அன்னை இல்லத்தை எப்படி ஜப்தி செய்ய முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரபு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில், பிரபு தான் அன்னை இல்லத்தின் உரிமையாளர். அதனால், ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.