அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது:

‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை.

கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், பாட்டுக்கும் அவர்களுக்கும் அதில் சம்பந்தமில்லை.

நாங்கள் ஒரு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தோம். அவர்கள் பூஜை போடும்போது எங்களுக்கு 10,000 ரூபாயை கொடுப்பார்கள். அவ்வளவு தான், ஆனால், அன்னக்கிளி பாடல் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால், அந்த ரெக்கார்டிங்கில் இருந்து எங்களுக்கு ஒரு பைசா கூட வரவில்லை.

அதன் பிறகு தான், இளையராஜா படத்திற்கு ஒப்பந்தம் ஆகும் போதே, இசையின் உரிமையை அவர் வாங்கிக் கொள்வார், படத்தின் இசைக்கு வேண்டுமானால் பணத்தை குறைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இசையின் உரிமை என்னிடம் இருக்க வேண்டும்’ என்றார்.

அப்போது தான், என் பாடலை மேடையில் பாடக்கூடாது என்று, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன், சில பிரச்சினைகள் வந்தன. நான் தலையிட்டு பேசிய பிறகு தான், மேடையில் எனது பாடலை பாடுவதற்கு ராயல்டி வேண்டாம்’ என்றார்.

7 கோடி ரூபாய் கொடுத்து மியூசிக் போட்ட இசையமைப்பாளரின் பாடல்களுக்கு கைத்தட்டல் வரவில்லை. நாங்கள் போட்ட பாடல்களை ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடி கைத்தட்டுகிறார்கள்.

அப்படியென்றால், அது எங்களுடைய பாட்டு தானே, அப்படி இருக்கும்போது எங்களுக்கு அதில் பங்கு உண்டு. அந்தப் பாடலை பயன்படுத்துகிறோம் என்று அனுமதிகேட்டு இருந்தால் அண்ணன் நிச்சயமாக கொடுத்திருப்பார். ஆனால், அனுமதி கேட்காதது தான் பிரச்சினை.

அஜித் படமாக இருந்தால் என்ன, அது எங்களின் சொத்து அதை எப்படி நீ திருடலாம், என் வீட்டுக்குள் நீ எப்படி அனுமதி இல்லாமல் வரலாம். அந்த படத்திற்கு என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறாரா… அவரிடம் இப்படி ஒரு மியூசிக் வேண்டும் என்று கேட்டு போடசொல்ல வேண்டியது தானே. அதை செய்யாமல், அனுமதி வாங்காமல், எங்கள் பாட்டை எப்படி அந்த படத்தில் பயன்படுத்தலாம்.

கேட்டு இருந்தால் நிச்சயம் சந்தோஷமாக கொடுத்து இருப்போம். எங்களுக்கு நிச்சயமாக பணத்தாசை இல்லை எங்களிடம் அதிகமாக பணம் இருக்கிறது’ என கூறியுள்ளார்.

ilaiyaraaja and gangai amaran songs copyright