நிலா வெளிச்சத்தில் முத்து மீனாவுடன் ரொமான்ஸ் செய்ய விஜயாவுக்கு வேட்டு வைத்துள்ளார் பாட்டி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதிக்கு சாப்பாடு ஊட்டி விட அதை மீனா ஏக்கமாக பார்க்க பாட்டி மீனாவை எழுந்து சென்று சுருதி பக்கத்தில் உட்கார சொல்கிறார். 

மீனாவும் எழுந்து போய் உட்கார பாட்டி இந்த வீட்டில எல்லாரும் சமம்தான் ஒரு மருமகளுக்கு ஊட்டிட்டு மத்த ரெண்டு மருமகளுக்கு ஊட்டலனா எப்படி மூணு பேருக்கும் உன் கையால சாப்பாடு ஊட்டு என்று சொல்ல விஜயா எதுக்கு அத்தை, ஸ்ருதிக்கு கையில் அடிபட்டு இருக்கு, அதனால ஊட்டி விடுறேன் என்று சொல்ல முத்து அதுக்காக மத்த ரெண்டு பேரையும் கையை வெட்டிக்கவா சொல்ல முடியும் என கவுண்ட்டர் போடுகிறார்.

நாச்சியார் பாட்டி சொன்னத செய் நீ மூணு மருமகளோட சந்தோஷமா இருக்கிறதை நான் பாக்கணும் என்று சொல்ல முதலில் ஸ்ருதிக்கு ஊட்டி பிறகு ரோகிணிக்கு ஊட்டி விடுகிறார். மீனாவிற்கு அப்படியே வாயில் சாப்பாட்டை திணித்து விட என்ன ரெண்டு மருமகளுக்கு ஒரு மாதிரி ஊட்டுற மீனாவுக்கு ஒரு மாதிரி ஊட்டுற என கேள்வி கேட்கிறார் பாட்டி. 

பிறகு எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு ரவி, ஸ்ருதி ரூமுக்கு செல்ல மனோஜ் ரோகிணி அவர்களது ரூமுக்கு சென்று விடுகின்றனர். மற்றவர்கள் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க மீனா பூ கட்டி கொண்டு இருக்க பூக்கடை பற்றிய பேச்சு எழுகிறது. 

ரோகினினாலும் என் பெயரில் பியூட்டி பார்லர் வச்சிருக்கா இந்த பூக்கடையினால என்ன பெருமை வந்துட போகிறது? வீட்டு வாசலில் கடையை வைத்து அவமானத்தை தான் தேடித்தரா என சொல்ல பூக்கடை ஒன்னும் அவ்வளவு மட்டமானது கிடையாது, உலகம் முழுவதும் பூவுக்கு நீ ஒரு டிமாண்ட் இருக்கு என்ன பூவின் அருமை பெருமைகளை பேசுகின்றனர். 

விஜயா கடுப்பாகி சரி இப்ப படுத்து தூங்கலாம் நாளைக்கு ரோகினி ஓட மாமா வந்துருவாரு அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பனும் என சொல்ல இன்னைக்கு இத சொல்லியே ஒரு வேலை செய்ய விடல நாளைக்கு பொங்கல் வைக்கவாவது விடுவியா இல்லையா என பாட்டி கேட்க பொங்கல் வருஷம் தான் வருது ஆனா ரோகிணியோட மாமா எப்பயாச்சும் தான் வருவாரு, அவர நல்லபடியா கவனிச்சு அனுப்பனும் அவர் வரும்போது இவனை வாய வச்சிட்டு சும்மா இருக்க சொல்லுங்க என்று சொல்ல முத்து மரியாதை இரண்டு பக்கமும் இருந்து வரணும். அங்கிருந்து வந்தா இங்க இருந்து கண்டிப்பா போகும் என பதிலடி கொடுக்கிறார். 

விஜயா மாமா வருவதைப் பற்றி பேசியதை கேட்ட ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு அந்த ஆள் வந்துடுவான் இல்ல ஒன்னும் சொதப்பிட மாட்டானே என கேட்க ஹாப்பி தியாகம் அவரே வந்துருவாரு சில ஏற்பாடு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு கரெக்டா வந்துடுவான், என்ன கொஞ்சம் ஓவரா ஆக்டிங் பண்ணுவான் அதை நீ சமாளிச்சுக்கோ என சொல்கிறார். 

பிறகு முத்து வீட்டு வாசலில் கட்டிலை போட பாட்டி மீனாவையும் உன் புருஷனோட போய் படு என துரத்தி விடுகிறார். முத்து இந்த நிலா வெளிச்சத்துல படுத்து தூங்குவது தனி சுகம் தான் என்று சொல்ல மீனா பனி கொட்டுது காலையில ஜலதோஷம் பிடித்துக்கும் அதுவும் இல்லாம அமாவாசை இப்பதான் போச்சு நிலா கூட கிடையாது என்று சொல்ல முத்து குடையை எடுத்து வந்து கட்டிலில் கட்டி நிலா வெளிச்சத்திற்காக போன் டார்ச்சை ஆன் செய்து வைத்து மீனாவை அசத்துகிறார். 

பிறகு இருவரும் கட்டில் படித்துக் கொள்ள மீனா இப்போ ஏதாச்சு பாட்டு ஞாபகம் வருதா என்று கேட்க முத்து நிலா காயுது நேரம் நல்ல நேரம் என பாட்டு பாடி உனக்கு என்ன பாட்டு என கேட்கிறார். மீனா யோசிக்க அதை நிறுத்து பார்த்து ரசிக்க என இன்றைய எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.