மனோஜ் வீட்டுக்கு வராததால் விஜயா பதற முத்து பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவுக்காக துணியை அயன் செய்து கொடுக்க முத்து வழக்கம் போல கோபப்பட்டு என்ன நீ மாத்த நினைக்காத என கசங்கி போன சட்டை போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்புகிறார்.

இந்த பக்கம் மனோஜ் ஹாஸ்பிட்டலில் இருந்து கண்விழித்து நான் எங்க இருக்கேன் என கேட்டு ரத்தத்தை பார்த்து பயப்படுகிறார். பிறகு டாக்டர்கள் கால் சுண்டு விரல் மீது ஆட்டோ டயர் ஏறி இறங்கியதால் ஒரு சிறு ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்கின்றனர். ‌‌ ரோகினி உங்க வீட்ல இருக்கவங்க யாருக்காவது போன் பண்ணி வர சொல்லவா என்ன சொல்ல மனோஜ் எனக்குன்னு யாரும் இல்ல நான் வரலனா கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க, செத்துப்போன கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க என நாடகம் போடுகிறார். இதனால் ரோகிணி நான் உங்களோடு இருந்து பார்த்துக் கொள்கிறேன் என இருக்கிறார்.

இந்த பக்கம் விஜயா மனோஜ் வரவில்லை என பதர அப்போது மீனா பால் எடுத்து வந்து கொடுக்க விஜயா நான் என் புள்ளையை காணும்னு கவலைல இருக்கேன் என சொல்கிறார். அங்கு வரும் முத்து வேணும்னா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா இந்த மாதிரி 27 லட்சம் பணத்தோட ஓடிப்போனான், திருப்பி வீட்டுக்கு வந்தான், இப்ப திருப்பி காணாமல் போயிட்டான் கண்டுபிடித்து கொடுங்கன்னு சொல்லலாம் என பதிலடி கொடுக்கிறார்.

பணத்த எல்லாம் யார்கிட்டயும் ஏமாறல எங்கயாவது கொடுத்து வைத்திருப்பான் திரும்பவும் இதை வீட்டுக்குள் சேர்ந்து விடலாம் என்று வந்திருப்பான் அது முடியலனு தெரிஞ்சதும் திருப்பி ஓடிப் போயிட்டான் திரும்பலாம் வரமாட்டான் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

மீனா அப்போது அத்த இந்த பால குடிங்க நீங்க சரியாவே சாப்பிடல என சொல்ல விஜயா கோபப்பட்டு பாலை தட்டி விட அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். முத்து அவர்களுக்கு என் மேல கோபம் அதை அங்க காட்டுறாங்க நீ இவங்களுக்கு எதுக்கு வேலை செய்ற உள்ள போ என மீனாவை உள்ளே அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி சொல்லி நண்பர்களாகி விடுகின்றனர். மனோஜ் இவ்வளவு அழகா இருக்கீங்க உங்களுக்கு யாரு ப்ரொபோஸ் பண்ணலையா என கேட்க ரோகினி அதுக்காக நான் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை என சொல்கிறார்.

பிறகு ரோஷினிக்கு கஸ்டமர் ஒருவரின் பிஏ போன் செய்து மசாஜ் செய்ய வேண்டும் வீட்டுக்கு வா என சொல்லி என்ன டிரஸ் போட்டு இருக்க என்ன தவறாக பேச ரோகிணி அதெல்லாம் வர முடியாது என போனை வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் செல்ல மீண்டும் அந்த பிஏ போன் பண்ண மனோஜ் யார் என கேட்டு நான் ரோகினியோட ஹஸ்பண்ட் என சொல்லி அந்த பிஏவை ஓட விடுகிறார். ‌‌

பிறகு ரோகினியிடம் ஹஸ்பண்ட் என சொன்னதுக்காக மன்னிப்பு கேட்க அவர் அதெல்லாம் பிரச்சனை இல்லை என காப்பாற்றியதற்காக தேங்க்ஸ் என சொல்ல மனோஜ் தனக்கு உதவியதுக்காக தேங்க்ஸ் சொல்ல பிறகு நீங்க சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் என ரோகிணி வெளியே செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.