மீனாவின் சபதத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை சில ஆட்களை வீட்டிற்கு கூட்டி வந்து மொட்டை மாடியில் ரூமை கட்டுவதற்காக அளவெடுத்து எவ்வளவு செலவாகும் என்று கேட்க 5 லட்சம் ரூபாய் என்று சொல்கின்றனர்.
முத்து அவ்வளவு பணத்துக்கு என்னப்பா பண்றது என்று கேள்வி கேட்க அண்ணாமலை வீட்டு பாத்திரத்தை அடகு வைக்கலாம் என்று சொல்ல விஜயா என் அப்பா வீட்டின் பத்திரத்தை அடக்க வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் முத்து இப்ப என்னப்பா செய்கிறது என்று கேள்வி கேட்க ரோகினி சபதம் போட்டு விடாதீங்க என்று சொல்ல மீனா என் புருஷனை சம்பாரித்து மேல ரூம் கட்டுவாரு இது இவங்க சொன்னா மாதிரி சத்தியம் என சபதம் செய்கிறார். இதைக் கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஈஸ்வரியை தனது வீட்டுக்கு அழைத்து வர ராமமூர்த்தியிடம் அந்த குழந்தையை நான் கொன்னுட்டேன்னு சொல்றாங்க என்று அழுது புலம்புகிறார். பிறகு கோபியை சந்தித்த பாக்கியா அதனால எனக்கு இருக்க நம்பிக்கை கூட உங்களுக்கு எப்படி இல்லாம போச்சு? உங்க அம்மா அப்படி என்றால் பண்றவங்களா கொஞ்சமாச்சும் யோசிச்சு பாருங்க என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.