STR

நடிகர் சிம்பு கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமானை சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவற்றில் திரிஷாவுடன் சேர்ந்து நடித்திருந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படம் மெகா ஹிட்டாகி இருந்தது மேலும் சிம்புவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடிக்க இருப்பதாக கௌதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால் மாதவனால் நடிக்க முடியாததால் மீண்டும் சிம்புவே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிம்பு கௌதம் மேனன் மற்றும் ரஹ்மானை சந்தித்துள்ளார் இதனால் விரைவில் விண்ணைத்தாண்டி வருவாயா-2 அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகினால் அதில் கார்த்தி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றிய கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் தெலுங்கு பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.