நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்து வர்மா. தமிழில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து அறிமுகமான இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கேஷுவல் லுக்கில் கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.