தைரியம் இல்லாமல் சூர்யா மும்பையில் ஒளிந்து கொண்டுள்ளதாக பேசியுள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
மேலும் நீட் தேர்வு போன்ற விஷயங்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்தார். அதே போல் இந்தி தேவையில்லை எனவும் தமிழை விட சிறந்த மொழி எதுவும் இல்லை எனவும் பேசி இருந்தார்.
அதிமுக ஆட்சியின் போது நடந்த நீட் தற்கொலைகளுக்கு பொங்கி எழுந்த சூர்யா திமுக ஆட்சியில் அடக்கி வாசித்து வருகிறார் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது நம்ம பேச்சு எடுபடாது என்பதாலே அவர் மும்பைக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகளுடன் அங்கு செட்டில் ஆகி விட்டார். அவர் ஒரு பச்சோந்தி போல் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறார் என பேசியுள்ளார்.