நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் வரும் 10 ஆம் தேதியான நாளை மறுநாள் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படம் வெளியாவதற்கு முன்பே இமயமலைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் செல்வது வழக்கம். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இமயமலை பயணத்தை தவிர்த்து வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை முன்னிட்டு இமயமலை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

அதனால் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காப்பியை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் தனியாக கண்டு களித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அவர் இமயமலை நோக்கி புறப்படுவார் என்று தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.