ஆதிக்கு வண்டியை தரமுடியாது என கூறிய சந்தியாவை திட்டி தீர்த்துள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Serial Episode Update 15.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரியான முறையில் லைசென்ஸ் வாங்கிய சரவணனுக்கு சாக்லேட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சந்தியா. சாக்லேட்டில் பங்குக்கு வரக்கூடாது என கூறிவிட்டு மொத்தமாக சாப்பிடுகிறார் சரவணன். தன்னை ஒரு வார்த்தைகூட சாப்பிடுறீங்களா என கேட்காததால் சந்தியா அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட கேட்க மாட்டீங்களா என கேட்கிறார். ஒரு சின்ன பீஸ் கொடுங்க என கேட்டதற்கு லேசாக சாக்லேட்டை உறசி கொடுக்கிறார். அதன் பிறகு ஒரு சிறிய துண்டை கொடுத்து என்னுடைய டீச்சருக்கு கொடுத்ததா நினைச்சுக்கிறேன் என கூறுகிறார். அதன் பின்னர் ஒண்ணாவது இரண்டாவது படிக்கும் போது தன்னுடைய டீச்சர் தனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அது அவர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் சாக்லேட் வாங்கி கொடுத்தது போன்ற நினைவுகளை பகிர்கிறார் சரவணன். மேலும் பக்கத்து வீட்டில் இருந்த பெண் தனக்கு முத்தமெல்லாம் கொடுப்பார். எங்க அம்மா திட்டினாலும் அந்தப் பெண் கேட்க மாட்டார். கடைசியில் கல்யாணம் ஆகி போய் விட்டார் என கூறுகிறார்.

ஆற்றலும் ஆக்கமும் தரும் ஆயுதபூஜை.!

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தியா சரவணன் கை மீது தூங்கிவிடுகிறார். திடீரென எழுந்து பார்த்தால் சரவணன் தூங்காமல் இருக்கிறார். என்ன இது என கேட்டதற்கு கை மேல் படுத்து கிட்டு இருக்கீங்க அசைக்க முடியல என கூறுகிறார். அதன் பிறகு தலையை எடுத்துக்கொண்டு சாரி செல்கிறார்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! | Velavan Stores

மறுநாள் காலையில் சந்தியா சரவணனின் பைக்கை துடைத்துக் கொண்டிருக்கிறார். ஆதி ஓடிவந்து அண்ணா எங்கே என கேட்கிறார். அவர் உள்ளே இருக்கிறார் எனக் கூற என்ன வேண்டும் எனக் கேட்டதற்கு பைக் சாவி வேண்டும் எனக் கூறுகிறார். சாவி என்னிடம் தான் இருக்கிறது எனக் கூறி சாவியை கொடுக்கிறார் சந்தியா. அந்த நேரத்தில் உன்னிடம் லைசென்ஸ் இருக்கா என கேட்க ஆதி இல்லை என கூறுகிறார். அப்படி என்றால் சாவியை கொடுக்க முடியாது என சந்தியா கூறிவிடுகிறார். நான் அண்ணனிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறியதற்கும் அவரே சொன்னாலும் நான் சாவியை தர மாட்டேன் என கூறி விடுகிறார். இந்த நேரத்தில் சிவகாமி வந்து என்ன ஏது என கேட்க நடந்ததை சந்தியா கூறுகிறார்.

அதன்பிறகு ஆதியை போய் லைசென்ஸ் எடுத்துட்டு வந்து வண்டியை ஓட்டு எனக் கூறி அனுப்பி வைக்கிறார். பின்னர் அர்ச்சனா சமையலறையில் சிவகாமி இருக்கும் நேரம் பார்த்து சந்தியா செய்தது கொஞ்சம் கூட நல்லா இல்லை என மூட்டி விடுகிறார். உடனே சிவகாமி இப்போ எதுக்கு சந்தியா பத்தி பேசிட்டு இருக்க? அவளைக் கூப்பிட்டு திட்டணுமா? இந்த மாதிரி மூட்டி விடு வேற வேலைய வெச்சுகாதே என திட்டுகிறார். இங்கிருந்து அர்ச்சனா வெளியே சென்றதும் சந்தியா உள்ளே வருகிறார். அப்போது சந்தியாவை கூப்பிட்டு சிவகாமி அண்ணன் தம்பிகளை பிரித்து விடாதே என கூறுகிறார். ஆதி கேட்டது ஒரு பத்து நிமிஷம் பைக் ஓட்டும் சொல்லிக் கொடுத்து இருக்கலாம் என கூறுகிறார்.

பின்னர் சரவணனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்கிறார் சந்தியா. சர்க்கரை இருவரையும் பைக்கில் ஒரு ரவுண்டு போக சொன்ன சரவணனும் போகலாம் எனக் கூற சந்தியாவும் சரி என சொல்கிறார். இருவரும் பைக்கில் அமர இத்துடன் முடிகிறது ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.