Raja Rani 2 Serial Episode Update 12.10.21

புருஷன், செந்தில் சரவணன் என குடும்பத்திற்கே இருக்கும் வியாதியை கண்டுபிடித்துள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Serial Episode Update 12.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் பைக் வாங்கியதை சந்தோஷமாக ரூமில் பேசிக்கொள்கின்றனர் சிவகாமியின் அவரது கணவரும். மறுநாள் காலையில் சந்தியா சரவணனை பைக் ஓட்ட எழுப்புகிறார். சரவணன் எழும்பாமல் தூங்கிக் கொண்டே இருந்ததால் டேய் சரவணா எழுந்திருடா என அதட்டி எழுப்பி விடுகிறார். எப்படி இருக்கீங்க திரும்பவும் சொல்லுங்க என சரவணன் கேட்க சந்தியா சொல்ல மாட்டேன் என தயங்குகிறார். பின்னர் மீண்டும் சந்தியா டேய் சரவணா எழுந்திருடா என எழுப்புகிறார். சந்தியா சரவணனுக்கு பைக் ஓட்ட பயிற்சி கொடுக்கிறார். இப்படியே நான்கைந்து நாட்கள் பயிற்சி செல்கிறது. அதன் பின்னர் சரவணன் ஓரளவிற்கு வண்டியை ஓட்ட கற்றுக் கொள்ள அந்த சமயத்தில் சந்தியா எதிர்பாராமல் தனது கையை சரவணன் இடுப்பில் வைக்க உடனே அவர் கூச்சப்படுகிறார்.

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு : 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

சரவணனிடம் இருக்கும் வீக்னெஸை கண்டுபிடித்த சந்தியா திரும்பத் திரும்ப அதை செய்கிறார். பின்னர் அனைவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் சந்தியா சரவணனின் இடுப்பை தொடுகிறார். உடனே சரவணன் சத்தம் போட்டு விட்டு எல்லோரும் என்ன ஏது என கேட்கின்றனர். பூச்சி என கூறி சமாளித்து கொள்கிறார் சரவணன்.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD

ஆனால் சந்தியா விழுந்து விழுந்து சிரிப்பதை சிவகாமி கவனித்து விடகிறார். கிச்சனில் சந்தியாவிடம் எதற்கு நீ சிரித்த என கேட்கிறார். இல்லாத உங்க புள்ளைக்கு இடுப்பில் கை வச்சா கூச்சமா இருக்கும் போல அதான் சப்தம் போட்டார் எனக் கூறுகிறார். ஓ சரவணன் கிட்ட இப்படி ஒரு பலவீனம் இருக்கும் என சிவகாமி புரிந்துகொண்டார். அதன் பின்னர் அதை பலவீனம் தன்னுடைய கணவரிடம் இருக்கா என பரிசோதனை செய்தார். இடுப்பில் கையை வைத்ததும் சிவகாமியின் கணவரும் கூச்சப்படுகிறார். மாமியார் செய்த வேலையை பார்த்த அர்ச்சனா அவரும் செந்தில் இடுப்பில் கையை வைக்க அவரும் கூச்சப்படுகிறார். ஓ இது குடும்பத்துக்கே இருக்க வியாதி போல என சிவகாமி சிரிக்கிறார். இத்துடன் முடிகிறது ராஜா ராணி சீரியல் எபிசோட்.