ஆதியால் ஜெசியை கைது செய்துள்ளது போலீஸ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் பரந்தாமன் தான் ஆளை வைத்து அடித்து வாயில் சரக்கை ஊற்றி விட்டதாக சரவணன் சொல்ல அதை நம்ப மறுக்கிறான் செந்தில். குடிபோதையில் ஏதோ உளறிட்டு இருக்கான் காலையில எழுந்ததும் பேசிக்கலாம் இப்ப கூட்டிட்டு போய் படுக்க வையுங்க என சொல்ல சரவணன் அம்மா சத்தியமா இது தான் நடந்தது என சொல்ல உன்னை பத்தி எனக்கு தெரியும் என சிவகாமி ஆறுதல் கூறுகிறார்.

அடுத்ததாக அர்ச்சனா அன்னைக்கு இவர் குடிச்சிட்டு வந்திருக்கும் போது எல்லாரும் சேர்ந்து அடிச்சீங்க இன்னிக்கு இந்த புள்ள குடிச்சிட்டு வந்திருக்கும்போது அப்படியே தங்கம் மாதிரி தாங்கறீங்க என சண்டையிடுகிறார். பிறகு இப்பயாவது உங்க அப்பா அம்மாவை புரிஞ்சுக்கோங்க என சொல்லி செந்திலை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

அதன் பிறகு கடையில் செயினை தொலைத்த பெண்மணி போலீசுடன் வந்து என் செயினை இங்குதான் கழட்டி வைத்தேன் மறந்துட்டு அப்படியே போயிட்டேன், என சொல்ல ஜெசி செயின் எதுவும் இங்க இல்லை என சத்தம் போடுகிறார். பிறகு போலீஸ் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசிக்கோ என ஜெசியை அழைத்துச் செல்கின்றனர்.

அடுத்ததாக சரவணன் சந்தியாவுக்கு போன் பண்ணலாமா ஏன் யோசித்து கொண்டு இருக்க சந்தியா போன் செய்து பேச சரவணன் அடிபட்ட விஷயத்தை மறைத்து விடுகிறார். அதன் பிறகு கௌரி மேடம் எல்லோரும் சீக்கிரம் போய் தூங்குங்க. நாளைக்கு பயிற்சி கடுமையாக இருக்கும் என கூறி அனுப்புகிறார்.

அடுத்து சிவகாமி சரவணன் இடம் இந்த தேர்தலில் இருந்து நீ பின்வாங்கி விடு அதுதான் நல்லது என சொல்ல சரவணன் சங்கத்தாலுங்க என்ன முழுசா நம்பி இந்த தேர்தலில் நிற்க வைத்து இருக்காங்க அப்படி பின்வாங்க முடியாது என கூறுகிறார். செந்தில நான் பார்த்திருக்கிறேன் என சொல்கிறார். இதனால் சிவகாமி அடுத்து என்ன நடக்க போகுதோ என வருத்தத்தோடு புலம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.