சென்னை போன கையோடு சரவணனை போட்டியில் தோற்க வைக்க அர்ச்சனா திட்டம் போட்டுள்ளார்.
Raja Rani 2 Episode Update 06.12.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ஹோட்டலில் அமர்ந்திருக்கும் சந்தியா சரவணன் இருவரும் விமானத்தை பார்த்து பேசிக் கொண்டிருக்கின்றனர். சந்தியா சென்னையில் இருப்பவர்கள் அந்த ஊருக்கு வந்தால் மாட்டு வண்டி டிராக்டர் இது எல்லாம் ஆச்சரியமாக பார்ப்பார்கள் என கூறுகிறார். அதுவும் சரிதான் என சரவணன் கூறுகிறார். பிறகு போட்டியை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். ஏன் என்னை ஏதேனும் கேட்க எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவார்கள் எனக்கு பேசத் தெரியாது என சொல்கிறார். அது வெறும் மொழி தான். நீங்க தமிழ்ல பேசுங்க ஒண்ணும் தப்பு இல்ல என கூறுகிறார். உன்னுடைய உணர்வுகளை தாய் மொழியால் மட்டும் தான் அழகாக புரிய வைக்க முடியும் என கூறுகிறார். பிறகு நான் ஒருமுறை பேசிக் காட்டட்டுமா என சரவணன் பேசி அசத்தி அந்த நேரத்தில் சரத் வந்து கை தட்டுகிறார். சூப்பர் என சரவணனை பாராட்டுகிறார். பிறகு சந்தியாவும் சரவணனை பாராட்டுகிறார். ரூமுக்கு போகலாம் என தன்னுடைய பிறகு சந்தியா ரகசியமாக சரத்திடம் நாளைக்கு அவங்கள சொன்ன டைமுக்கு கூட்டிட்டு வந்துடுங்க என கூறுகிறார்.
2 டோஸ் தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையா? : மத்திய அரசு புதிய முடிவு
இந்தப் பக்கம் எல்லோரும் ட்ரெயினுக்கு கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். சிவகாமி தனது கணவரிடம் இப்படி இருங்க அப்படி இருங்க என கூறுகிறார். பார்வதி பாஸ்கருக்கு போன் செய்து சென்னைக்கு போவதை கூறுகிறார். அவரும் சரி நீ போய்ட்டு வா அதுக்கு அப்புறம் நாம மீட் பண்ணலாம் என கூறுகிறார். கிளம்பும்போது சரவணனின் அப்பா மயிலிடம் சிவகாமியை நல்லபடியா பார்த்துக்கோ. அவர் எங்களை நெனச்சுக்கிட்டேன் சாப்பிடாம இருப்பா. வேலை வேலைக்கு சாப்பாடு கொடு என கூறுகிறார். மயிலும் நான் பார்த்துக்கிறேன் என சொல்லி வழி அனுப்புகிறார்.
ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh
மறுநாள் காலையில் சிவகாமி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்ப அவருடைய காலில் அடிபட்டு விடுகிறது. இதே அபசகுனமாக தெரிவதாக இன்னொரு பெண்மணி கூற சிவகாமி பதறுகிறார். என் சரவணனுக்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறார். அதன் பிறகு இந்தப் பக்கம் சந்தியாவும் சரவணனும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் பெல் அடிக்க சந்தியா சரவணனை போய் பாருங்க என கூறுகிறார். கதவைத் திறந்த சரவணனுக்கு ஒரு ஷாக் குடும்பத்தார் அனைவரும் இங்கே இருக்கின்றனர். அனைவரையும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொள்கிறார் சரவணன். எப்படி வந்தீங்க என கேட்க சந்தியா தான் டிக்கெட் போட்டார் என அவருடைய அப்பா கூட சரவணன் நன்றி கூறுகிறார். பிறகு அனைவரையும் ரூமிற்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கிறார் சந்தியா.
பிறகு சரவணன் அப்பா டீ காபி ஏதாச்சு சொல்லு மா என சொல்ல சரி சொல்கிறேன் மாமா என கூறுகிறார் சந்தியா. அப்படியான அந்த ரூம் சாவி என அர்ச்சனா கேட்க வாங்கிட்டு வந்து தரேன் என கூறுகிறார் சந்தியா. கடவுளா பாத்து ஒரு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்திருக்காரு. சரவணன் இந்த போட்டியில் ஜெயிக்க விடாமல் பண்ணனும் என திட்டம் போடுகிறார் அர்ச்சனா. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.