ஊரடங்கால் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் சிக்கலில் இருந்து வருகிறது. இதனால் மணிரத்னம் வேறு ஒரு படத்தை கையில் எடுக்க உள்ளார்.
Ponniyin Selvan Direct Roja 2 : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்த்தப்பட்டாலும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்துவது தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
சின்ன வயசுலேயே தளபதியோட ஆட்டம் போட்டுட்டேன் – மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட வீடியோ!
இதன் காரணமாக மணிரத்னம் அடுத்ததாக வேறு ஒரு படத்தை இயக்கலாம் என முடிவெடுத்து அதற்கான கதையை எழுதி முடித்துள்ளாராம்.
அது ரோஜா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மணிரத்னம் அரவிந்த் சாமியை வைத்து இந்த படத்தை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.