சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ponmagal Vanthal Movie Pooja : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சூர்யா. இவருடைய 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ஜோதிகாவை வைத்து பொன்மகள் வந்தால் என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை ஜே ஜே ப்ரட்ரிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இன்று தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.
படத் தொகுப்பாளராக ரூபனும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் . சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
பூஜையில் மூத்த நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல்,
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு,
எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும்,மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.