ஜெய்பீம் படத்தை பார்த்த பார்த்திபன் பதிவு செய்துள்ள பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Parthiban About Jai Bhim Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்த பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் என்னத்த சொல்றது.. சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்… நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

Annaatthe படம் பார்க்க குடும்பத்தோடு வந்த சிறுத்தை சிவா – வைரலாகும் வீடியோ| Rajini , Nayanthara

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஜெய் பீம் படம் பற்றி பதிவு செய்துள்ள இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.